உள்ளூர் செய்திகள்
தருமபுரி சந்தையில் முருங்கை கீரை விலை தொடர்ந்து உயர்வு
தருமபுரி சந்தையில் முருங்கை கீரை விலை தொடர்ந்து உயர்வு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் உள்ளன. இவற்றிற்கு அந்தந்த பகுதியை சேர்ந்த ஏாளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பல்வேறு காய்கறி மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சந்தைக்கு சிறுகீரை, பாளாங்கீரை, வெந்தயக்கீரை, மனத்தக்காளி முருங்கை உள்ளிட்ட கீரைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இதில் முருங்கை கீரை மட்டும் தொடர்ந்து விலை உயர்வில் இருந்து வருகிறது. அதன்படி 200 கிராம் கொண்ட பல்வேறு கீரைகள் மூன்று ரூபாய் முதல், ஐந்து ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.
ஆனால் முருங்கை கீரையின் விலை மட்டும் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து 15 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.