ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை உற்சவம்

பழனி முருகன் கோவிலில் சித்திரை மாத கார்த்திகை உற்சவம்

Published On 2021-04-16 03:17 GMT   |   Update On 2021-04-16 03:17 GMT
சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. அதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரமும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரமும் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சித்திரை மாத கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டளை தரிசனம், கால பூஜை தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 41 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி கலந்துகொண்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதுபோல நத்தம் அருகே திருமலைக்கேணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் சித்திரை மாத கார்த்திகை பூஜை நேற்று நடந்தது. மேலும் கோவில் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் கார்த்திகை பூஜை நடந்தது.
Tags:    

Similar News