செய்திகள்

ஒரத்தநாடு அருகே இளம்பெண் புகாரில் கணவர் கைது

Published On 2019-02-01 11:53 GMT   |   Update On 2019-02-01 11:53 GMT
ஒரத்தநாடு அருகே இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக அவரது கணவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(வயது 40). இவரது மனைவி சந்தியா(38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தியா கள்ளக்காதலனுடன் குழந்தைகள், கணவரை விட்டு தலைமறைவானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பிய சந்தியாவை போலீசார் அழைத்து கணவருடன் சமரசம் செய்துள்ளனர். அப்போது பாக்கியராஜ் மனைவி செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சந்தியா ஒரத்தநாடு போலீசில் கணவர், அவரது தம்பி சங்கர்(42), சங்கரின் மனைவி பானு(34), மாமியார் தங்கம்மாள்(70) ஆகிய 4 பேர் மீதும் புகார் கொடுத்தார்.

அதில் 4 பேரும் தன்னை வீட்டை விட்டு ஓடியது தொடர்பாக தொடர்ந்து திட்டி கொடுமைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News