உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 117 பேர் குணமாகி வீடு திரும்பினார்

Published On 2022-01-15 07:43 GMT   |   Update On 2022-01-15 07:43 GMT
மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, ஒரு லட்சத்து, 01 ஆயிரத்து, 114 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் 373 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, ஒரு லட்சத்து 01 ஆயிரத்து, 114 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பு வரிசையில் 12வது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. நேற்று, 117 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 98 ஆயிரத்து, 69 பேர் குணமடைந்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 2,016 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றுடன், கொரோனா தொற்று பலி எண்ணிக்கை, 1,029 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News