உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்.

கடையம் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை

Published On 2022-01-12 05:48 GMT   |   Update On 2022-01-12 06:00 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23).

இவர் திண்டுக்கலில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரும் மைலப்பபுரத்தை சேர்ந்த சேர்ந்த துரை, சாம் சன் பிளஸ்சிங் ஆகியோரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று மைலப்பபுரத்தில் அவ்வையார் கோவில் திருவிழா நடந்தது. இதில் மணிகண்டனும், அவரது நண்பர்கள் துரை, சாம்சன் பிளஸ்சிங் ஆகியோரும் சென்றனர். பின்னர் அனைவரும் நன்றாக மதுகுடித்ததாக கூறப்படுகிறது.

மது போதையில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் இந்த கோவில் திருவிழாவிற்கு நீங்கள் எப்படி வரலாம் என்று சாம்சன் பிளஸ்சிங்கிடம் தகராறு செய்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த துரையும், சாம்சன் பிளஷ்சிங்கும் சேர்ந்து இன்று அதிகாலை மணிகண்டனை கத்தியால் குத்தினர். இதில் மணிகண்டனின் மார்பில் கத்திக்குத்து விழுந்ததால், சம்பவ இடத்திலேயே அவர் ரத்தவெள்ளத்தில் பிணமானார்.

உடனே துரை, சாம்சன் பிளஸ்சிங் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

கொலை குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரை, சாம்சன்பிளஸ்சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News