செய்திகள்
கொரோனா வைரஸ்

பிரேசிலை உலுக்கும் கொரோனா - 45 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-09-19 20:11 GMT   |   Update On 2020-09-19 20:11 GMT
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 45 லட்சத்தைக் கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.36 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38 லட்சத்தை நெருங்குகிறது. சுமார்.75 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News