செய்திகள்
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி சத்திரம் மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.