செய்திகள்
முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம்
இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.200, ஹெல்மெட் அணியாமல் வந்த 15 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பஸ் நிலையம், பாலம் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 10 பேருக்கு தலா ரூ.200, ஹெல்மெட் அணியாமல் வந்த 15 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் முககவசம் அணிவது, ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.