செய்திகள்
பெரியார் பிறந்தநாளையொட்டி சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருப்பூர்:
தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் அலுவலர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பணியாளர்கள் அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க., சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அவைத்தலைவர் நேமிநாதன் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட, ஒன்றிய, பகுதி, அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேப்போல் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.