ஆன்மிகம்
நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமிக்கு தங்ககவச அலங்காரம்

நாமக்கல் பாலதண்டாயுதபாணி சாமிக்கு தங்ககவச அலங்காரம்

Published On 2021-02-20 05:45 GMT   |   Update On 2021-02-20 05:45 GMT
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலை காந்தி நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலை காந்தி நகரில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் நேற்று கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு கிருத்திகையையொட்டி பால், இளநீர், சந்தனம் உள்பட 13 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News