செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயிலில் பொம்மலாட்டம்- அதிகாரிகள் தகவல்

Published On 2021-01-22 02:48 GMT   |   Update On 2021-01-22 02:48 GMT
மெட்ரோ ரெயில் நிலையத்தில் (தெருநிலை) கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நாடகம் நடக்கிறது.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அகரம் கலைக்குழு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி முதல் 7.50 மணி வரை விமானநிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் (தெருநிலை) கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான நாடகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை வண்ணாரப்பேட்டை மெட்ரோவிலிருந்து விமான நிலையம் மெட்ரோ (டி.எம்.எஸ். வழியாக) மற்றும் விமான நிலையம் மெட்ரோவிலிருந்து சென்டிரல் மெட்ரோ (கோயம்பேடு வழியாக) செல்லும் மெட்ரோ ரெயிலில் பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இதனை கண்டு களித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Tags:    

Similar News