உள்ளூர் செய்திகள்
மாயம்

காரைக்கால் அருகே திருமணமான இளம்பெண் மாயம்

Published On 2022-04-17 11:01 GMT   |   Update On 2022-04-17 11:01 GMT
காரைக்கால் அருகே திருமணமான இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்களாச்சேரியை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 30). இவருக்கும், திருவிடைக்கழியைச் சேர்ந்த சுந்தரி(26) என்பவருக்கும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வினோத்குமார் வேலை நிமித்தமாக அடிக்கடி ஆந்திரா சென்றுவிடுவது வழக்கமாம். அவ்வாறு ஆந்திரா செல்லும்போது, மனைவியை அவரது தாய் வீட்டில் விடுவது வழக்கம்.

இந்நிலையில், தாய் வீட்டில் இருந்த சுந்தரிக்கும் தரங்கம்பாடி காட்டு வீதியைச்சேர்ந்த அய்யப்பன்(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் வெளியே சுற்றிவந்தனர். திடீரென கடந்த 7-ந் தேதி சுந்தரி மாயமானார்.

வினோத்குமார் இதுகுறித்து விசாரித்தபோது சுந்தரி அய்யப்பனுடன் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். சுந்தரியின் தாய் பொறையார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் இருவரையும் தேடி கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் அறிவுரை கூறி அவரவர் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து திருவிடைக்கழிக்கு வந்த வினோத்குமார் சம்பவத்தன்று காரைக்கால் அருகே தென்னங்குடியில் உள்ள சுந்தரியின் உறவினர் விட்டுக்கு சுந்தரியை அழைத்து சென்று அங்கு வசித்து வந்தார்.

தொடர்ந்து கடந்த 11-ந் தேதி சுந்தரி மீண்டும் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் சுந்தரி கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோத்குமார் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News