உள்ளூர் செய்திகள்
.

காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற பெண் பலி

Published On 2022-05-05 07:25 GMT   |   Update On 2022-05-05 07:25 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பஞ்சேஸ்வரம் அடுத்த பி.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆஞ்சினப்பா. இவரது மனைவி ஜலஜம்மா (வயது 50), கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது கனமழையால் பி.செட்டிப்பள்ளி அருகே உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஓடையை கடக்க ஜலஜம்மா இறங்கிய போது அவருடன் வந்த மற்ற 2 பெண்கள் தடுத்தனர். ஆனால் அதற்குள் ஜலஜம்மா ஓடையில் இறங்கிய நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதை பார்த்த 2 பெண்களும், ஜலஜம்மா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறையினர். 

தேவி ஏரியில் நேற்று இரவு மீட்டனர். இந்த சம்பவம் பற்றி கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News