செய்திகள்
கோப்பு படம்

ஊத்தங்கரை அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

Published On 2019-11-20 09:50 GMT   |   Update On 2019-11-20 09:50 GMT
ஊத்தங்கரை அருகே மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது22). மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று மாலை மாணவி தனது வீட்டில் இருந்து பால் சொசைட்டிக்கு சென்று பாலை கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ராஜசேகர் அந்த மாணவி கையை பிடித்து இழுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். மாணவி அங்கிருந்து தப்பி சென்று தனது தாயிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி கதறி அழுதார்.

மாணவியின் தாயார் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.
Tags:    

Similar News