செய்திகள்
கோப்புபடம்

களக்காடு அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-01-11 12:46 GMT   |   Update On 2021-01-11 12:46 GMT
களக்காடு அருகே தொழிலாலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரை நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுகராஜா (வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இதனால் மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் மது அருந்தும் பழக்கமும் ஏற்பட்டது. 

இதனிடையே கடந்த 8-ந் தேதி வீட்டில் ஒரு அறையில் உட்புறமாக கதவை பூட்டி விட்டு, தூக்கு போட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அவரது சகோதரர் திருப்பதிராஜா (29) களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் காளியப்பன் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News