செய்திகள்
கொரோனா தடுப்பூசி

இதுவரை 12.71 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு

Published On 2021-04-20 14:26 GMT   |   Update On 2021-04-20 14:26 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி ஒன்றுதான் மக்களை தொற்றில் இருந்து காப்பாற்ற ஒரே வழி என, தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

இன்று ஒரேநாளில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாகவும், ஒட்டுமொத்தமாக இன்று காலை 7 மணி வரை 12,71,29,113 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மே 1-ந்தேதியில் இருந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News