செய்திகள்
அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வேடகட்டு மடுவு பகுதியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 63). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு பெட்டிக் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கல்யாணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கல்யாணியை, அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் மூதாட்டி பலியானது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.