செய்திகள்

ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு

Published On 2019-05-15 11:05 GMT   |   Update On 2019-05-15 12:31 GMT
தமிழ்நாட்டில் ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கான டெட் (Teachers Eligibility Test) என்ற ஆசிரியர் தகுதி தேர்விற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 28-2-2019 அன்று வெளியிட்டது. 

www.trb.tn.nic.in என்ற தளத்தில் மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இணைதளம் சரிவர இயங்காததால் பலர் விண்ணப்பிக்க முடியவில்லை என புகார் தெரிவித்தனர். 

இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதியில் இருந்து 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில்,  ஜூன் 8 மற்றும் 9 தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. 8-ம் தேதி முதல்தாள் மற்றும் 9-ம் தேதி இரண்டாம்தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2013 மற்றும் 2017ல் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டுக்கான (2018) தேர்வு நீதிமன்ற வழக்கு காரணமாக நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News