செய்திகள்
பாராளுமன்றம்

பாராளுமன்றத்தில் நாளை மறுநாள் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல்

Published On 2021-11-27 09:10 GMT   |   Update On 2021-11-27 11:27 GMT
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

புதுடெல்லி:

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற போவதாக அறிவித்தார் ஆனால் விவசாயிகள் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 


இந்த நிலையில் நாளை மறுநாள் (29-ந் தேதி) பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதன் முதல் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படுமென மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் இன்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... ஜெயலலிதா வீட்டு சாவியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்- கலெக்டரிடம் தீபா, தீபக் மனு

Tags:    

Similar News