செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,449 பேருக்கு கொரோனா பாதிப்பு - 33 பேர் பலி

Published On 2021-04-16 13:16 GMT   |   Update On 2021-04-16 13:16 GMT
தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றினாலும் கூட நோயின் தாக்கம் தீவிரம் அடைந்து வருவதால் மேலும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 8,449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,71,384 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 61,593 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 4,920 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,96,759 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 13,032 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News