ஆன்மிகம்
ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மேள,தாளங்கள் முழங்க ஆண்டாள், ரெங்கமன்னார் கொடிமரம் அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி நேற்று கார்த்திகை ஏகாதசி என்பதால் கோவிலிலிருந்து மேள,தாளங்கள் முழங்க ஆண்டாள், ரெங்கமன்னார் கொடிமரம் அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.