செய்திகள்
வாணியம்பாடி அருகே சாராயம் விற்றவர் கைது
வாணியம்பாடி அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் சாராயம், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாணியம்பாடி கச்சேரி ரோடு அருகில் காமராஜபுரம் பகுதியில் வேலு என்ற குட்டிவேலு (வயது 33) என்பவர் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.