செய்திகள்
கொட்டகையில் தீ விபத்து

செங்கோட்டை அருகே மண்பானை சூடுபடுத்தும் கொட்டகையில் தீ விபத்து

Published On 2020-01-10 12:30 GMT   |   Update On 2020-01-10 12:30 GMT
செங்கோட்டை அருகே மண்பானை சூடுபடுத்தும் கொட்டகையில் தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள் மற்றும் கொட்டகை முற்றிலும் சேதமடைந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே தேன்பொத்தையில் மண்பாண்டம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக மண்பானைகள் செய்து கேரளாவிற்கும், தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.

மண்பாண்டங்களை சூடாக்கி உறுதிப்படுத்த கொட்டகை ஒன்றில் இட்டு சுள்ளை என்று சொல்லும் தீவைத்து சுட வைப்பார்கள்.

இந்நிலையில் இன்று இந்த பகுதியில் பல மண்பாண்டங்களை உருவாக்கி இந்த பகுதியில் சுள்ளையில் தீ வைத்தனர். அப்போது திடீரென்று கொட்டகையில் தீ பற்றியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு செங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அங்கு வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள் மற்றும் கொட்டகை முற்றிலும் சேதமடைந்தது.

Tags:    

Similar News