செய்திகள்
இந்திய ராணுவம் தாக்குதல்

ஆக்கிரமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி

Published On 2019-10-20 08:48 GMT   |   Update On 2019-10-20 08:48 GMT
ஜம்மு காஷ்மீரின் ஆக்கிமிப்பு பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலியாகினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கிடையே,  ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News