செய்திகள்
சிவகங்கை அருகே 4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகங்கை அருகே இளையான்குடி புதூர் பகுதியில் ரேஷன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது அங்கு 4¾ டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அங்குள்ள வாணிப கழக கிட்டங்கியில் லோடுமேனாக பணியாற்றி வரும் பாண்டி என்பவர் அங்கு பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
நிவாரணமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அரிசியை பதுக்கியது தொடர்பாக வினியோக அதிகாரி முபாரக் உசேன் கொடுத்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில், ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியபோது அங்கு 4¾ டன் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அங்குள்ள வாணிப கழக கிட்டங்கியில் லோடுமேனாக பணியாற்றி வரும் பாண்டி என்பவர் அங்கு பதுக்கி வைத்திருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
நிவாரணமாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அரிசியை பதுக்கியது தொடர்பாக வினியோக அதிகாரி முபாரக் உசேன் கொடுத்த புகாரின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.