செய்திகள்
சாலை விபத்து

மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதல் - பால் வியாபாரி பலி

Published On 2019-10-22 18:21 GMT   |   Update On 2019-10-22 18:21 GMT
வேதாரண்யம் அருகே மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பால் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த மூலக்கரை பிச்சன்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 47). பால் வியாபாரி. நேற்று பால் கொள்முதல் செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமார் பிராந்தியங்கரை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பால் வியாபாரி குமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Tags:    

Similar News