செய்திகள்
நாராயணசாமி

திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

Published On 2021-06-10 00:25 GMT   |   Update On 2021-06-10 00:25 GMT
திருச்சி மத்திய சிறை காவலர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
திருச்சி:

விருதுநகர் மாவட்டம் பாவலி சந்திரகிரிபுரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 32). இவர் திருச்சி மத்திய சிறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். சிறை வளாகத்தில் உள்ள தெற்கு காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நாராயணசாமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சக காவலர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரி சேர்த்தனர். இதையடுத்து, ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதியானது. அவருக்கு ஆக்சிஜன் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Tags:    

Similar News