தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போன்கள் விலையை திடீரென உயர்த்திய சாம்சங்
மற்ற நிறுவனங்கள் வரிசையில் சாம்சங் நிறுவனமும் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.
இந்திய சந்தையில் சியோமி, ஒப்போ மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் விலையை கடந்த வாரம் உயர்த்தின. இந்த நிலையில், சாம்சங் நிறுவனமும் தனது ஸ்மார்ட்போன்கள் விலையை உயர்த்துகிறது.
விலை உயர்வின் படி கேலக்ஸி எப்02எஸ், கேலக்ஸி எம்02எஸ் மற்றும் கேலக்ஸி ஏ12 போன்ற மாடல்களின் விலை மாறி இருக்கின்றன. மூன்று மாடல்களின் அனைத்து வேரியண்ட்கள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய விலை விவரம்:
கேலக்ஸி எப்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499
கேலக்ஸி எப்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499
கேலக்ஸி எம்02எஸ் 3 ஜிபி+32 ஜிபி ரூ. 9,499
கேலக்ஸி எம்02எஸ் 4 ஜிபி+64 ஜிபி ரூ. 10,499
கேலக்ஸி ஏ12 4 ஜிபி+64 ஜிபி ரூ. 13,499
கேலக்ஸி ஏ12 4 ஜிபி+128 ஜிபி ரூ. 14,499
விலை உயர்வு தவிர, சாம்சங் விரைவில் தனது கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 போன்ற சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இவற்றுடன் கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.