தொழில்நுட்பம்
நோக்கியா 3.4

விரைவில் இந்தியா வரும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2021-02-03 11:57 GMT   |   Update On 2021-02-03 11:57 GMT
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் விரைவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருப்பதை தெரிவித்து உள்ளது.

ஹெச்எம்டி குளோபல் நஇறுவனம் நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட்டு உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் நோக்கியா 2.4 மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது. தற்சமயம் நோக்கியா 3.4 மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. எனினும், சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

சிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 3.4 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் பன்ச் ஹோல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 8 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News