செய்திகள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடும் பணி தொடங்கியது. இதனை தோட்டக்கலை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி, பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டு மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு 59-வது மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதையொட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ள பிரையண்ட் பூங்காவில் ஏற்கனவே 2 கட்டங்களாக மலர்செடிகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 3-ம் கட்டமாக மேரிகோல்டு, பேன்சி, டயான்தஸ், ஆஸ்டர், அன்டிரேனியம் உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனை தோட்டக்கலை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி, பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த பூக்கள் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் பூக்கத் தொடங்கி சுமார் 3 மாத காலம் வரை பூக்கும் தன்மையுடையது. இறுதிக்கட்ட மலர் செடிகள் நடவு செய்யும் பணி ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றனர்.
கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்காவில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பூங்காக்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டு மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு 59-வது மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதையொட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ள பிரையண்ட் பூங்காவில் ஏற்கனவே 2 கட்டங்களாக மலர்செடிகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 3-ம் கட்டமாக மேரிகோல்டு, பேன்சி, டயான்தஸ், ஆஸ்டர், அன்டிரேனியம் உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதனை தோட்டக்கலை துணை இயக்குனர்கள் சீனிவாசன், சீதாலட்சுமி, பூங்கா மேலாளர் சிவபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த பூக்கள் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் பூக்கத் தொடங்கி சுமார் 3 மாத காலம் வரை பூக்கும் தன்மையுடையது. இறுதிக்கட்ட மலர் செடிகள் நடவு செய்யும் பணி ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றனர்.