வழிபாடு
அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரி மலை

அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்ரி மலையை புனித தலமாக மேம்படுத்த 16-ந்தேதி பூமி பூஜை

Published On 2022-02-10 05:01 GMT   |   Update On 2022-02-10 05:01 GMT
அஞ்சனாத்ரி மலைப் பகுதியை புனித தலமாக மேம்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, 16-ந்தேதி பூமிபூஜை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்க உள்ளது.
திருமலையில் அனுமன் பிறந்த இடமாகக் கூறப்படும் அஞ்சனாத்ரி மலைப் பகுதியைச் சுற்றி புனித தலமாக மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி ஆகாச கங்கை பகுதியில் 16-ந்தேதி நடக்கிறது.

முன்னேற்பாடுப் பணியை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி, கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஜவகர்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமலையில் ஆகாச கங்கைக்கு அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலை ஆஞ்சநேயர் பிறந்த இடமாக புராணம் மற்றும் அறிவியல் சான்றுகளுடன் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, அஞ்சனாத்ரி மலைப் பகுதியை புனித தலமாக மேம்படுத்த திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து, 16-ந்தேதி பூமிபூஜை நடத்தி கட்டுமானப் பணியை தொடங்க உள்ளது. நிகழ்ச்சியின்போது அனுமன் பிறப்பு குறித்த புத்தகமும் வெளியிடப்படுகிறது.

காணிக்கையாளர்கள் உதவியோடு அஞ்சனாதேவி, பால ஆஞ்சநேயர் கோவில்கள், முக மண்டபம், கோபுரங்கள், கோ-கர்பம் அணை அருகில் அமைக்கப்படும். புகழ்பெற்ற கலை இயக்குனர் ஒருவரின் வடிவமைப்பில் கட்டுமானப் பணிகள் நடக்க உள்ளது.

திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் 1.5 ஏக்கர் நிலத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பாக அபிவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு தியான மண்டபம், தோட்டம் அமைக்கப்படும். பூமி பூஜை போட்டதும் அங்குப் பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News