உண்மை எது
வைரல் படம்

ஜப்பானில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

Published On 2021-12-16 06:09 GMT   |   Update On 2021-12-16 06:09 GMT
கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ள இடுகாட்டில் எடுக்கப்பட்டதாக புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


நூற்றுக்கணக்கான கார்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவை ஜப்பானில் உள்ள வாகனங்களுக்கான இடுகாடு என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. இங்கு கைவிடப்பட்ட வாகனங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை ஜப்பானில் உள்ள இடுகாட்டில் எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த புகைப்படங்கள் அமெரிக்காவில் உள்ள வாகன இடுகாட்டில் எடுக்கப்பட்டவை ஆகும். இரு புகைப்படங்களில் ஒன்று நியூ மெக்சிகோ பகுதியில் உள்ள வாகன இடுகாடு ஆகும். இதனை தனியார் செய்தி நிறுவன புகைப்பட கலைஞர் 2018 ஆம் ஆண்டு எடுத்தார். 



மற்றொரு படம் துருக்கி கலைஞர் டிஜிட்டல் முறையில் உருவாக்கியது ஆகும். அந்த வகையில், இரு படங்களும் ஜப்பானில் உள்ள வாகன இடுகாட்டில் எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
Tags:    

Similar News