செய்திகள்
தற்கொலை

திருமயம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-24 13:04 GMT   |   Update On 2021-10-24 13:04 GMT
திருமயம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

திருமயம் அருகே உள்ள வாலக்குறிச்சியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). தொழிலாளி. இவரது நண்பர், ஒரு பெண்ணுடன் மாயமான நிலையில், அதுதொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News