ஆன்மிகம்
கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்
கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
“நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்கள் என்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?1 கொரி - 3:16”.
நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனை சரியாக உணர்ந்து, அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் நிறைய பேர், இந்த விதமான சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்க செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே நிறைய பேர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாக போகின்றனர்.
முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீர பிரகாரமான வாழ்க்கையும் அமைய வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்து தான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.
எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்கு தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
“ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள், அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.
- சாம்சன் பால்.
நம்முடைய வாழ்க்கையின் மேல் கடவுள் வைத்துள்ள திட்டம் என்ன? இதனை சரியாக உணர்ந்து, அதற்குள் நம்மை உட்படுத்துவதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையின் முக்கிய அம்சம் ஆகும். ஆனால் நிறைய பேர், இந்த விதமான சிந்தனைக்குள் ஒருபோதும் வருவதேயில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய திட்டங்களையும், நம்முடைய ஆலோசனை சார்ந்த செயல்களையும் கடவுள் ஆசீர்வதித்து அவைகளை வாய்க்க செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோமேயன்றி, நம்மிடம் கடவுளுடைய எதிர்பார்ப்பு என்னவென்பதை கவனித்து அறிய விரும்புவதில்லை. இதன் விளைவாகவே நிறைய பேர் கடவுளுடைய ஆசீர்வாதங்களை வாழ்க்கையில் கண்டடையாதவர்களாக போகின்றனர்.
முதலாவதாக நாம் தேவனுடைய ஆலயங்களாக விளங்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். அதாவது கடவுள் தங்குமிடமாக நம்முடைய சரீரமும், சரீர பிரகாரமான வாழ்க்கையும் அமைய வேண்டும். ஏனென்றால் கடவுள் யாரை ஆசீர்வதிக்க விரும்புகிறாரோ அவரோடு தங்க விரும்புகிறார். அவரோடு தங்கியிருந்து தான் கடவுள் அவரை ஆசீர்வதிக்க முடியும். இது தேவ நியமம்.
எனவே முதலாவது நம்மோடு கடவுள் தங்கியிருப்பதற்கு ஏற்ற விதமாக நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமானதாக மாறுவதற்கு தான் நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். கடவுள் தங்குகிற ஒரு ஆலயமாக நாம் மாறிட வேண்டும் என்ற தேவ திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்கும் போது கர்த்தர் நம்முடைய காரியங்களை நிச்சயம் ஆசிர்வதிப்பார்.
“ஊர் ஊராய் போய் இறைவனை நீ தேடினாலும் உனக்குள், அவரை நீ தேடாதவரை உன் தேடல்கள் யாவும் வீணே.
- சாம்சன் பால்.