செய்திகள்
காஷ்யப் - சாய் பிரனீத்

சீன ஓபன் பேட்மிண்டன் - காஷ்யப், சாய் பிரனீத் தோல்வி

Published On 2019-11-08 04:37 GMT   |   Update On 2019-11-08 04:37 GMT
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் காஷ்யப், மற்றொரு ஆட்டத்தில் சாய் பிரனீத் போராடி தோல்வியை தழுவினர்.
புஜோவ்:

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி புஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 25-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் காஷ்யப் 13-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான விக்டர் ஆக்சல்சென்னிடம் (டென்மார்க்) தோற்று வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 20-22, 22-20, 16-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஆன்டர்ஸ் ஆன்டன்செனிடம் போராடி தோல்வியை தழுவினார். இந்த ஆட்டம் 2 மணி 24 நிமிடம் நீடித்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 21-18, 21-23, 21-11 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹிரோய்கி என்டோ-யுதா வதனாபி ஜோடியை வீழ்த்தி காலிறுதியை எட்டியது.
Tags:    

Similar News