செய்திகள்
கோப்பு படம்.

தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 1 வயது குழந்தை பலி

Published On 2020-02-10 13:18 GMT   |   Update On 2020-02-10 13:18 GMT
திருச்சி தென்னூரில் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை தண்ணீர் வாளியில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.
திருச்சி:

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 38). இவர் அதே பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆகிறது. 7 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு 8- ஆவதாக குழந்தை பிறந்துள்ளது.

இந்தநிலையில் வீட்டில் இருந்த 7 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டு  இருவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒன்றரை வயது குழந்தையான ஹரிப் , வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது குளியல் அறையில் இருந்த தண்ணீர் நிரம்பியிருந்த வாளியில் தவறி விழுந்து இறந்தது. 

இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News