உள்ளூர் செய்திகள்
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்

இலவச- கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை - கலெக்டர் தகவல்

Published On 2022-04-15 10:17 GMT   |   Update On 2022-04-15 10:17 GMT
திருவாரூர் மாவட்டத்தில் இலவச& கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி-குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டத்-திலுள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளி-களில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின்

குழந்தைகளுக்கான சேர்க்கை இணையவழியாக 20.4.2022 முதல் 18.5.2022 வரை விண்ணப்-பங்களை பதி-வேற்றம் கீழ்கண்ட அலுவல-கங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

திருவாரூர் முதன்மைக் கல்விஅலுவலகம், திருவாரூர் மற்றும் மன்னார்குடி. மாவட்டக் கல்வி அலுவலகங்கள், திருவாரூர், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம்,

மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அப்பகுதியில் உள்ள வட்டார வள மையங்கள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்

பள்ளிகளில் பதிவு நடைபெறுகிறது. பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News