செய்திகள்
கமல்ஹாசன்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Published On 2021-07-15 10:49 GMT   |   Update On 2021-07-15 10:49 GMT
“வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’ என ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள வீரர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

“வறுமையின் பிடியில் இருந்த போதும் சாதனையாளர்களாகத் திகழும் நீங்கள், உண்மையான ‘உலக நாயகர்கள்’. நீங்கள் இந்தியாவை உலகமே திரும்பி பார்க்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் நீங்கள். ஒரு பெரிய பேரரசு கூட 500 வருடத்திற்கு மேல் கிடையாது. ஏழ்மையும் அப்படித்தான். ஒரு திறமை சாலி நினைத்தால் ஏழ்மையை ஓட ஓட விரட்ட முடியும்”.

“இந்தியாவின் ‘தங்கச் சுரங்கம்’ நீங்கள், வெறும் தங்கபதக்கம் அல்ல. நீங்கள் கற்றவையை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். அது நீங்கள் செய்யவேண்டிய கடமை. போட்டியை நிதானமாக, பதற்றமின்றி எதிர் கொள்ளுங்கள்.

உங்கள் மீது நீங்கள் கொண்டுள்ள சுயமரியாதையை போலவே, உங்கள் விளையாட்டையும் மரியாதையுடன் எதிர்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியுடன் திரும்பும்போது உங்களை பாராட்ட நாங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்.” என்றார்.


அப்போது பேசிய வீராங்கனை ரேவதி, “எங்களுக்காக நேரம் ஒதுக்கி எங்களை ஊக்குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு பதக்கங்களை வெல்ல எங்கள் முழு முயற்சியை செலுத்துவோம்.” என்று தெரிவித்தார்.

கமல் இன்று காலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும் என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்

Tags:    

Similar News