ஆன்மிகம்
குலசேகரம் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
குலசேகரம், மணலிவிளை ஈஸ்வர கால பூதத்தான் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. விழாவின் இறுதி நாளான 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு போன்றவை நடக்கிறது.
குலசேகரம், மணலிவிளை ஈஸ்வர கால பூதத்தான் பத்ரகாளி அம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமம், காலையில் கலசாபிஷேகம், சிறப்பு பூஜை, அம்மனுக்கு பூநீர் எடுத்துவர புறப்படுதல், மதியம் பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோவிலில் இருந்து பால்குடம், பன்னீர் குடம், சந்தன குடம் எடுத்து அம்மன் பவனி வருதல் போன்றவை நடந்தது.
பவனியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சுதர்சன ஹோமம், துர்க்கா பூஜை, புஷ்பாபிஷேகம், பஜனை, திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளான 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு போன்றவை நடக்கிறது.
பவனியை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சுதர்சன ஹோமம், துர்க்கா பூஜை, புஷ்பாபிஷேகம், பஜனை, திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெறும். விழாவின் இறுதி நாளான 9-ந் தேதி காலை 7.30 மணிக்கு வில்லிசை, 10.30 மணிக்கு பொங்கல் வழிபாடு போன்றவை நடக்கிறது.