செய்திகள்
முதல் பரிசு பெற்ற மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரி மாணவர் சுதர்ஷன் வடிவமைத்த மரச்சிற்பம்.

பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைப்பு

Published On 2021-01-28 02:29 GMT   |   Update On 2021-01-28 02:29 GMT
பழங்காலம் முதல் தற்காலம் வரையிலான ஓட்டுமுறை மரச்சிற்பத்தில் வடிவமைத்து மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரி மாணவர் முதல் பரிசை பெற்றார்.
மாமல்லபுரம்

தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிறுத்தி தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு நுண்கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு மாதிரி சிற்பங்கள் மூலம் வாக்காளர்கள் புரிந்து கொள்கின்ற வகைகளில் மாதிரி சிற்பங்கள் வடிமைக்கும் போட்டி நடத்தப்பட்டது.

இதில் மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலை கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட மரச்சிற்ப பிரிவு பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் சுதர்ஷன் என்ற மாணவர் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மற்றும் வாக்காளர்களை கவரும் விதமாக பழங்கால பனை ஓலை ஓட்டு முறை முதல் தற்போதைய வாக்குப்பதிவு எந்திர ஓட்டு முறை வரை மற்றும் நாடாளுமன்ற கட்டிடம், தமிழக சட்டமன்ற கட்டிடம் போன்றவற்றை மரச்சிற்பத்தில் அழகுற வடிவமைத்தார்.

இந்த மரச்சிற்பம் தமிழக அளவில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறந்த விழிப்புணர்வு கலை படைப்பு சிற்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இந்த மாணவருக்கு பரிசு வழங்கி உள்ளார்.

அதேபோல் மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை கல்லூரியில் உலோக சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும்முரட்டுகருப்பன் என்ற மாணவர் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓட்டுரிமை முக்கியம் என்ற கருத்தினை முன்னிறுத்துகின்ற வகையில் மெழுகில் வட்டவடிவில் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக ஒரு விரலை காண்பித்த நிலையில், சுற்றி பல்வேறு பணி செய்கின்ற டாக்டர், போலீசார், வக்கீல்கள், மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், கர்ப்பிணி பெண், ஊனமுற்றோர், பிச்சைக்காரர், கலைஞர்கள், சமூகத்தில் உயர்ந்த மனிதர், துப்புரவு பணியாளர் போன்ற அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வோடு அனைவரும் காட்சி கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மெழுகு சிற்பம் 3-ம் பரிசு பெற்றுள்ளது.

தமிழக அளவில் வாக்காளர் விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட போட்டியில் முதல் பரிசும், 3-ம் பரிசும் பெற்ற சுதர்ஷன் மற்றும் முரட்டு கருப்பன் ஆகியோரை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் சக ஆசிரியர்கள், தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்யபிரதாப்சாகு மற்றும் அதிகாரிகள் பாராட்டி வாழ்த்தினர்.
Tags:    

Similar News