லைஃப்ஸ்டைல்
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை

Published On 2021-04-12 06:33 GMT   |   Update On 2021-04-12 06:33 GMT
தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது.
கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ்தான் இந்தப் பதிவு.

குழந்தையின் முகம் தாயின் மார்ப்பை நோக்கி இருந்தலும் குழந்தையின் வாய் காம்பை பற்றி இருந்தால், குழந்தை தாய்ப்பால் குடிக்க உதவியாக இருக்கும். ஒரு கையால் குழந்தையின் கழுத்தை பிடித்திருக்கவும் இன்னொரு கையால் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியைப் பிடித்து தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தையின் மூக்கு மார்பில் பட்டு அழுத்திவிடாமல், குழந்தையின் தலையை லேசாகத் தூக்கி பால் கொடுத்தல் வேண்டும்.

குழந்தைக்கும் மார்புக்குமான உயரத்தை மெல்லிய தலையணை வைத்து சரி செய்யலாம். குழந்தையின் கீழ் உதடு, நாக்கு, முகவாய் அனைத்தும் தாயின் மார்பகத்தில் இருந்தால் குழந்தை மிக எளிதாகப் பால் கொடுக்க முடியும்.

குழந்தை பால் குடிக்கும்போது, தாயின் மார்புக் காம்பு வலித்தால் தாயின் சுண்டு விரலால் குழந்தை மற்றும் மார்பக காம்பையும் சற்று பிரித்து விடுங்கள். இல்லையெனில் காம்பு வியர்த்து, ஒட்டி புண் உண்டாகலாம். காம்பு வலிக்கும் போது கவனமாகப் பிரித்து விட்டால் மார்பின் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

முதலில் குழந்தை வேக வேகமாகப் பால் குடிக்கும். பின்னர் அப்படியே தூங்கிவிடும். பிறகு பசி என அழும். இவற்றைத் தடுக்க, குழந்தை தூங்கிவிட்டால் தாய் தன் மார்புக் காம்பை லேசாக இழுத்து விட குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிக்கும்.

மார்பைக் கடிக்க முயற்சித்தால், குழந்தை வாயிலிருந்து நகர்த்திக் கொள்ள வேண்டும். காம்பைக் கடிக்கத் தொடங்கும் போதெல்லாம், குழந்தையுடன் அன்பாக பேசி, சிரித்தபடியே முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து கடிக்க கூடாது எனத் தலையை ஆட்டி சொன்னால் குழந்தைக்கு புரியும்

குழந்தை வயிறு நிரம்பி இருந்தால், பசியில்லாமல் இருந்தால் வலுகட்டாயமாகப் பால் கொடுக்க கூடாது. குழந்தைக்கு பல் முளைக்கும் போது லேசான வீக்கம் ஏற்படும். இதனால் குழந்தை மார்பைக் கடித்து விடும். இதனால் குழந்தையின் ஈறுகளில் வெள்ளைத் துணி சுற்றிய விரலால் லேசாக அழுத்தி மசாஜ் செய்திட ஈறு வீக்கம் சரியாகிவிடும்.

குழந்தை பால் குடித்தவுடன், குழந்தையைத் தோளில் லேசாக சாய்த்து, முதுகில் தட்டி விட வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வந்தப்பின் படுக்க வைக்கலாம். இல்லையெனில் குழந்தை தாய்ப்பாலை எக்களித்து விடும். தோள்ப்பட்டை ஸ்ட்ராப் கனமானதாக, அகலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பின் எடையை பிராவால் தாங்க முடியும். பிராவின் முன் பக்கம் மார்பு பகுதியில் திறப்பு உள்ள பருத்தி ஆடை பிராவை பயன்படுத்தலாம்.

சுத்தமான வெந்நீரால் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் சுத்தம் செய்யலாம். குளிக்கும் போது வாசனை இல்லாத, தரமான சோப்பை மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.

மார்பக அழகு போய்விடும் என தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. பெண்ணின் கர்ப்பக் காலத்திலே மார்பில் மாற்றங்கள் வந்துவிடும். உங்கள் மார்ப்பை, மற்றவருடன் ஒப்பிட வேண்டாம். கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு மார்பக காம்பு லேசாக வெளிவந்து, அதனை சுற்றி கறுப்பு நிறம் உண்டாகும். மார்பகத்தில், ரத்த நாளங்களில் பச்சை நிற அடையாளமாகத் தெரியும்.

பிரசவ காலத்தில் வெளிர் மஞ்சள் நிறம் அல்லது இளமஞ்சள் நிற திரவம் காம்பு வழியாக வரும். அதைப் பலரும் வழித்துத் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி செய்ய கூடாது. இந்த பாலை ‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இது பிறந்த குழந்தைக்கு மிக மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகத் தோல் வறட்சியாவதுத் தடுக்கப்படும்.

மஞ்சள் காமாலை, சளி, மார்பு புண், காச நோய் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.
Tags:    

Similar News