செய்திகள்
கோப்புபடம்

கொரோனாவுக்கு தாய் பலி - மகன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-05-14 08:36 GMT   |   Update On 2021-05-14 08:36 GMT
கொரோனாவுக்கு தாய் இறந்ததால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை சேர்ந்தவர் ஜாபர். இவரது மகன் ஆஜம், (வயது 24) இவர், ஓசூர் அடுத்த பாகலூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ஆஜமின் தாய், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் நேற்று மாலை இந்தார்.

இந்த தகவல் அறிந்து ஆஜம் மிகவும் மனவேதனையடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில், பாகலூர் ஆசிரியர் காலனியில் உள்ள தனது வீட்டில், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனாவுக்கு தாய் இறந்ததால் அதிர்ச்சியில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாகலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News