செய்திகள்
விசாரணை

கள்ளப்பெரம்பூர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் பிணம்- போலீசார் விசாரணை

Published On 2019-10-15 10:54 GMT   |   Update On 2019-10-15 10:54 GMT
கள்ளப்பெரம்பூர் அருகே அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வல்லம்:

தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள வடகால் வடக்கரை பகுதியில் நேற்று காலை சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபரின் உடல் கிடப்பதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்தனர். இது குறித்து வடகால் கிராம நிர்வாக அலுவலருக்கும், கள்ளப்பெரம்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வடகால கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரைசேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News