செய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெண் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் பெண் விடுதலை கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் பெண் விடுதலை கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெண் விடுதலைக்கட்சியின் நிறுவனத்தலைவர் சபரிமாலா தலைமை தாங்கினார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.