உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2022-04-17 05:46 GMT   |   Update On 2022-04-17 05:46 GMT
செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி:

மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது வழுதாவூர் சாலையில் செல்போன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் பிள்ளைத்தோட்டம் நவீனா கார்டனை சேர்ந்த திருப்பதி மகன் விக்னேஷ் (வயது22)

மற்றொருவர் கதிர்காமம் தட்சிணா மூர்த்தி நகர் 3-வது கிராசை சேர்ந்த தணிகாசலம் (49)என்பதும் இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

பின்னர் அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் ரூ.2,400 பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News