இந்தியா
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் துணை ஜனாதிபதி, பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று பரவிவருகிறது.
புதுடெல்லி:
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு இன்று கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் என கேட்டுக் கொண்டுள்ளார்.