ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் நாகசதுர்த்தியையொட்டி பெரிய சே‌ஷ வாகனத்தில் ஏழுமலையான் பவனி

Published On 2021-11-08 06:49 GMT   |   Update On 2021-11-08 06:49 GMT
நாகசதுர்த்தியையொட்டி இன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் ஏழுமலையான் பெரியசே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து அருள்பாலிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாக சதுர்த்தியையொட்டி ஆண்டுதோறும் ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் பெரிய சே‌ஷ வாகனத்தில் இன்று இரவு 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், கிருஷ்ண அவதாரத்தில் பலராமனாகவும், மகா விஷ்ணுவுக்கு படுக்கையாக ஆதிசே‌ஷன் சேவை செய்து வருகிறார்.

இதன் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளில் ஏழுமலையான் பெரியசே‌ஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் நாகசதுர்த்தியையொட்டி இன்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் ஏழுமலையான் பெரியசே‌ஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து அருள்பாலிக்கிறார்.

திருப்பதியில் நேற்று 34,824 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 15,650 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News