உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாள் மூடல்

Published On 2022-01-11 11:30 GMT   |   Update On 2022-01-11 11:30 GMT
நெல்லை மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
வருகிற 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், 26-ந்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்து செயல்படும் மது பானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும்.

 அன்றைய தினம் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News