செய்திகள்
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் பட்டியலை அனுப்புங்கள்- பதிவாளர் சுற்றறிக்கை
கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக்கடன் விவரங்களை அனுப்புமாறு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரான சுப்பிரமணியன், கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர், கூடுதல் பதிவாளர் மேலாண்மை இயக்குனர்கள், அனைத்து மண்டல துணைப் பதிவாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக்கடன் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைத்து இணை பதிவாளர்களும் அதற்கான படிவத்தில் நகைக்கடன் தகவலை பெற்று சிடியில் பதிந்தும், அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதையடுத்து அதற்கான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து நகைக்கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.