ஆன்மிகம்
பாஞ்சாலி அம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கில் உற்சவர்கள் வீதி உலா

பாஞ்சாலி அம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கில் உற்சவர்கள் வீதி உலா

Published On 2021-01-19 04:33 GMT   |   Update On 2021-01-19 04:33 GMT
சேத்துப்பட்டு பேரூராட்சி பழம்பேட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாஞ்சாலி அம்மன் ஊர்வலம் நடந்தது.
சேத்துப்பட்டு பேரூராட்சி பழம்பேட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாஞ்சாலி அம்மன் ஊர்வலம் நடந்தது.

இதையொட்டி பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர், அர்ஜூனன், பீமன், தர்மன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து கிராம தேவதையாக விளங்கும் பாஞ்சாலி அம்மனுக்கு படையலிட்டனர்.

அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ஜூனன், பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகளை புஷ்ப பல்லக்கில் வைத்து வீதி உலா நடந்தது.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

Tags:    

Similar News